Monday 28 March 2016

வருவாய் அருள்வாய் குகனே.










உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய், வருவாய் அருள்வாய் குகனே.


வருமானமே இல்லாமல் ஜீவனமே கஷ்டமாக இருக்கிறதா?
உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைக்கவில்லையா?
உழைப்பதற்கு மார்ககம் எதுவும் தென்படவில்லையா?
முருக பக்தரா நீங்கள்?

கந்தர் அநுபூதியில் கடைசி ஸ்லோகமாக வரும் மேற்சொன்ன நான்கு வரிகளை வாசித்தாலோ அல்லது மனம் உருகிப் பாடினாலோ அந்தக் குமாரன் அருளுவானாம்.
கந்தர் அநுபூதி என்பது ஞானம் வேண்டிப் பாடப் பெற்றது. இதில் எங்கிருந்து லௌகிகமான பணம் வந்தது என்று கேள்வி கேட்கவேண்டும் என்றால் என்னைக் கேட்க வேண்டாம்.  
 மஹா பெரியவா, ஒரு பக்தருக்குச் சொன்ன உபாயம் இது.
ரசித்துப் படிக்கவும்.

இது பக்தி ருசி!!!!


<script>
  (function(i,s,o,g,r,a,m){i['GoogleAnalyticsObject']=r;i[r]=i[r]||function(){
  (i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
  m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
  })(window,document,'script','https://www.google-analytics.com/analytics.js','ga');

  ga('create', 'UA-47810302-2', 'auto');
  ga('send', 'pageview');

</script>





Sunday 27 March 2016

காலிஃப்லவர் பக்கோடா ::

                                           


  காலிஃப்லவர் பக்கோடா




தேவையான பொருட்கள்:

ஒரு நடுத்தர ஸைஸ் காலி ஃப்லவர்: 1

மைதா:6 தேக்கரண்டி

அரிசி மாவு: 4 தேக்கரண்டி

 CORN FLOUR: 4 தேக்கரண்டி

மிளகாய் பொடி 2 ஸ்பூன்

மஞ்சள் பொடி: 1 ஸ்பூன்

பெருங்காயம் தூள்: ஒரு சிட்டிகை

உப்பு :தேவையான அளவு


செய்முறை:

முதலில் காலி ஃப்லவர்ரை சிறிது காம்போடு மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கொதிக்கும் நீரில் இவற்றை போட்டு ஒரு துளி மஞ்சள் பொடி, மற்றும் துளி உப்பு சேர்த்து ஒரு இருபது நிமிடம் தட்டு போட்டு மூடி வைக்கவும்.

பிறகு நன்றாக  வடிகட்டி சூடு ஆறவிடவும்.

மைதா, சோளமாவு,  அரிசி மாவு, உப்பு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி அனைத்தையும் கலந்து ஒரு சல்லடையில் சலிக்கவும்.

ஒரு பேசினில் இவற்றை கொட்டி சுத்தப் படுத்திய காலிஃப்லவர்ரையும் சேர்த்து ஒரு அகலக் கரண்டியால் கலந்து .விடவும்.  மிக மிகக் கொஞ்சமாக நீர் தெளித்து  கைகளால் கலந்தால்  மாவு ஒரே சீராக எல்லா இடங்களிலும் ஒட்டும்.

இந்தக்  கலவையை ஒரு அரை மணி நேரம் ஃப்ரிட்ஜ் இல் குளிர வைக்கவும்.
பிறகு எடுத்து மிதமான தீயில் பொறித்து எடுக்கவும்.


பின் குறிப்பு:

மேற்சொன்ன முறையில் மாவை கலந்தால் மாவு தனியாகவும் காலி ஃப்லவர் தனியாகவும் போகாமல் நல்ல முழுமையாக பரவி இருக்கும்.  லேசாக நீர் தெளிக்கும் போது கவனம் தேவை.
காரம் அதிகம் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.
காலி ஃப்லவர் நார் சாத்து நிறைந்தது.  கேன்சர் நோய் வாராமல் பாதுகாக்கும்.



<script>
  (function(i,s,o,g,r,a,m){i['GoogleAnalyticsObject']=r;i[r]=i[r]||function(){
  (i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
  m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
  })(window,document,'script','https://www.google-analytics.com/analytics.js','ga');

  ga('create', 'UA-47810302-2', 'auto');
  ga('send', 'pageview');

</script>




வாழைக்காய் பொடி

தேவையான பொருட்கள்:

நல்ல முற்றிய வாழைக்காய்- 1

மிளகாய் வற்றல்- 5

பெருங்காயம்: ஒரு சுண்டைக்காய் அளவு

உளுந்தம்பருப்பு : 50 கிராம்

கடலை பருப்பு: 50 கிராம்

நல்லெண்னை : 1 தேக்கரண்டி

உப்பு: தேவையான அளவு


செய்முறை:

வாழைக்காயை குக்கரில் இரண்டு விசில் வரை வேக வைத்து எடுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், பெருங்காயம்,

உளுந்து, கடலை பருப்பு போட்டுபொன் நிறமாகச்சிவந்ததும் நன்றாக ஆர

வைக்கவும்.  மிக்ஸீயில் உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

வாழைக்காயை  கேரட் துருவுவது போல் துருவி, அரைத்த பொடியுடன் கலந்து வைக்கவும்.


பின் குறிப்பு:

அதிக எண்ணெய் செலவில்லை.  சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.  சுட்ட  அப்பளம் நல்ல பொருத்தமாக இருக்கும்.
தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ளவும் நன்றாக இருக்கும்.  சாப்பிட்டுப் பார்த்து உங்கள் மேலான கருத்தைக் கூறவும்.

<script>
  (function(i,s,o,g,r,a,m){i['GoogleAnalyticsObject']=r;i[r]=i[r]||function(){
  (i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
  m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
  })(window,document,'script','https://www.google-analytics.com/analytics.js','ga');

  ga('create', 'UA-47810302-2', 'auto');
  ga('send', 'pageview');

</script>


கோதுமை அல்வா

                                                                             




தேவையான பொருட்கள்:
சம்பா கோதுமை ரவை : 1 கப்
சர்க்கரை: 2 1/2 [இரண்டரை] கப்
நெய் : 4 தேக்கரண்டி
முந்திரி: 6
ஏலக்காய்: 2

செய்முறை:
சம்பா கோதுமை ரவை யை நீரில் 2 மணி நேரம் ஊர வைக்கவும்.
மிக்ஸியையில் நன்றாக அறைக்கவும்.
ஒரு வடிகட்டியில் வடித்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு அரை கோப்பை நீர் சேர்த்து சர்க்கரையை ஒரு வாணலியில் போட்டுக் கலந்து அடுப்பில் வைத்துக் கிளரவும். தீ மிதமாக இருக்கலாம்.
சர்க்கரை கரைந்து ஒரு கம்பி பாதம் வந்ததும் வடித்து வைத்துள்ள சம்பா கோதுமை சாற்றை சேர்த்து கிளரவும்.
நன்றாக சேர்ந்து வரும்போது கொதிக்கும் நீரை கொஞ்சம் கொஞ்சம்மாக் ஊற்றி கிளரவும்.
கிளர கிளர கெட்டி ஆகிக் கொண்டே வரும்.
சுமாராக ஒரு அரை மணி நேரம் கிளறியவுடன் அல்வா நன்றாக .வெந்திருக்கும்.
ஒரு 3 தேக்கரண்டி நெய்யை விட்டு மீண்டும் கிளர கோதுமை அல்வா அநேகமாக தயார்.
மீதமுள்ள ஒரு தேக்கரண்டி நெய்யில் முந்திரியை ஒடித்து பொறித்து சேர்த்து, ஏலம் சேர்க்கவும்.
பின் குறிப்பு:
வண்ணம் சேர்ப்பது அவரவர் விருப்பமே.
Non-stick கடாயில் செய்தால் ஒட்டாமல் நன்றாக வருகிறது.
நன்கு கிளறினால் நல்ல துண்டம் போடவும் வரும்.
சர்க்கரை அளவு நெய் அளவு அனைத்துமே ஆரோக்கியம் கருதி கொடுக்கப் பட்டுள்ளது.
சர்க்கரைக்கு மாற்றாக வெல்லமும் உகந்ததே.
அனைத்து தர மக்களும் கொஞ்சம் அதிகம் சாப்பிட்டாலும் உடலுக்கு ஒன்றும் கெடுதல் ஏற்படக் கூடாது என்பதே குறி.



<script>
  (function(i,s,o,g,r,a,m){i['GoogleAnalyticsObject']=r;i[r]=i[r]||function(){
  (i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
  m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
  })(window,document,'script','https://www.google-analytics.com/analytics.js','ga');

  ga('create', 'UA-47810302-2', 'auto');
  ga('send', 'pageview');

</script>