Friday 8 April 2016

ஆரோக்கியச் சிரிப்பு:

ஆரோக்கியச்  சிரிப்பு::

அநேகம் பேரைப் பார்க்கிறோம்.  அத்தனை பேருமா சிரித்த முகத்துடன் இருக்கிறார்கள்?
சிரித்தால் என்னஆகும்?
சிரிக்காவிட்டால் என்ன ஆகும்?
நல்ல படித்தவர்கள், மருத்துவர்கள், பெரிய பதவியில் இருப்பவர்கள் . பலரையும் கவனித்தால் சிரிப்பு என்ற ஒன்றையே மறந்தவர்களாக வலம் வருகிறார்கள்.

BALTIMORE பல்கலைக் கழகத்தில் ஓர் ஆய்வு நடத்தினார்களாம். இதய நோயால் பாதிக்கப் பட்ட  ஒரு 100 பேரில் 40 பேர் வாழ்வில் சிரிக்கவே மறந்தவர்களாம்.
தினப்படி காலை எழுவது, சிற்றுண்டி, அலுவலகம் செல்லுதல், வேலை, மாலை வீடு திரும்புதல், இரவு சாப்பாடு, தூக்கம்...

இதய நோய் வராமல் பாதுகாக்க நீங்கள் என்னென்ன முயற்சிகள் எடுப்பீர்களோ, உதாரணமாக--மாடிப்படி [லிஃப்ட் தவிர்தல்] உபயோகித்தல், பச்சை காய் கனிகளை உண்ணுதல், கீரை வகைகளை உணவில் அடிக்கடி சேர்த்தல், நடைப் பயிற்சி, இப்படி....

நன்றாகச் சிரிக்கவும் செய்யுங்கள்.

பக்க விளைவுகள் இல்லாதது சிரிப்பு

சிரிப்பு பல விஷயங்களை நேராக்க உதவும்.
இயந்திரங்கள் துரு பிடிக்காமல் இருக்க,  தேய்மானம் ஆகாமல் இருக்க,  வேகமாக இயங்க அவற்றிற்கு  எண்ணெய் இடுவது போல நாம் சிரிப்பால் நம்  உள் உறுப்புகளுக்கு எண்ணெய் இடுகிறோம்.
ஆங்கிலத்தில் இதற்கு LUBRICATION என்று சொல்லுவர்.
ENDOCRINE GLANDS சரியாக வேலை செய்யும்.
வயிறு உருள உருள சிரிக்க வேண்டும்.  கெட்ட கொழுப்பு கரைய உதவும்.
இதயத்திற்க்கும் நுரையீரலுக்கும் நல்ல மஸாஜ் கிடைக்கிறது.  .

பிறர் மனம் புண்படும்படி  கேலி செய்து சிரிக்காதீர்.
[மஹபாரதத்தில் த்ரௌபதி சிரித்ததை நினைவில் கொள்க]

சமூகவலை தளங்களில் நிறைய சிரிக்க வைக்க துணுக்குகள் வருகின்றன.  வரவேர்க்கத் தகுந்தவை.

ஹாஸ்ய ரசனை மஹா பெரியவர் போன்ற  மஹான்களுக்கும்இருந்திருக்கிறது, நினைவில் கொள்க.

தனியாக மட்டும் சிரிக்காதீர்!!!




<script>
  (function(i,s,o,g,r,a,m){i['GoogleAnalyticsObject']=r;i[r]=i[r]||function(){
  (i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
  m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
  })(window,document,'script','https://www.google-analytics.com/analytics.js','ga');

  ga('create', 'UA-47810302-2', 'auto');
  ga('send', 'pageview');

</script>

Sunday 3 April 2016

கந்த சஷ்டி கவச மகிமை

தேவ ராய சுவாமிகள் அருளிச் செய்த கந்த சஷ்டிக்  கவசம் சக்தி  மிக்கது.

சாதாரணமாகவே மந்திரங்களுக்கு சக்தி உண்டு.  குறிப்பாக சஷ்டிக் கவசம் போன்ற ஸ்லோகங்கள் மிகவும் சிறப்பானவை.

பாம்பன் சுவாமிகளே சஷ்டிக் கவசம் படித்த பாதிப்பில் தான் ஷண்முக கவசம் எழுதியதாகச் சொல்லுவார்கள்.

1] இக  பர சுகங்கள் அத்தனையும் கிடைக்கப் பெறலாம்.
2] சிறுவர்கள் சிறுமியர்களுக்கு கந்த சஷ்டிக் கவசம் சொல்லிக்கொடுக்க வாக்கு வன்மை  பெரும். பேச்சாளர்ககளாக வருவார்கள்.
3] தடை இன்றி பாடங்களை வாசிக்க வரும்.  
4] அனைத்து  நோய்களுக்கும்பரம .ஔஷதம்.
5] பக்தி ருசி ஊட்டி  பிள்ளைகளை வளர்க்க உதவும்.
6] சஷ்டி விரதம் இருப்பவர்கள் ஆறு நாட்களும் தன்னால் இயன்ற அளவு கந்த சஷ்டி கவசம் வாசிக்க வேண்டுதல் நிறைவேறும்.  
இப்படி அநேக பலன்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.   

தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள்,  வரும் கால சந்ததிகள் தமிழை மறக்காமல் இருக்க, வளர்க்க மிகச் சிறந்த  வழிகளுள் ஒன்று  சஷ்டிக் கவசம் வாசித்தல்.

ஒழுக்கம் தானாக வரும்.









<script>
  (function(i,s,o,g,r,a,m){i['GoogleAnalyticsObject']=r;i[r]=i[r]||function(){
  (i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
  m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
  })(window,document,'script','https://www.google-analytics.com/analytics.js','ga');

  ga('create', 'UA-47810302-2', 'auto');
  ga('send', 'pageview');

</script>

Friday 1 April 2016

வாங்கீ பாத்[கத்திரிக்காய் சாதம்]



தேவையான பொருட்கள்:

வடித்த சாதம் 200கிராம்
பிஞ்சு கத்திரிக்காய் கால் கிலோ
வெங்காயம் 2
என்ணெய் 3 ஸ்பூன்
புளி கரைசல் 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1ஸ்பூன்
தனியா பொடி 2 ஸ்பூன்
மிளகாய் பொடி2 ஸ்பூன்
கடுகு, உளுந்து, மிளகாய் வற்றல், - தாளிக்க
 உப்பு தேவைக்கு ஏற்ப
.அலங்கரிக்க கொத்துமல்லி,   தக்காளித் துண்டுகள்.

செய்முறை:

என்ணெய்யில்  கடுகு, மிளகாய் வற்றல், உளுந்து தாளித்து பிறகு பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
ஒரு 3 நிமிடம் வதங்கியதும் நறுக்கி வைத்த கத்திரிக்காய்களைச் சேர்க்கவும்.
மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், புளி கரைசல், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
பிறகு சாதத்தை போட்டுக் கிளரவும்.


பின் குறிப்பு:

சாதம் வடிக்க பாஸ்மதி அரிசியும் உபயோகிக்கலாம்.
சிறு தானியங்கள் உபயோகித்தாலும் நல்ல ருசி இருக்கும்.
வாசனைக்கு ஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலை சேர்க்கலாம்.
முந்திரி-அவரவர் விருப்பம், வசதி போல.

<script>
  (function(i,s,o,g,r,a,m){i['GoogleAnalyticsObject']=r;i[r]=i[r]||function(){
  (i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
  m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
  })(window,document,'script','https://www.google-analytics.com/analytics.js','ga');

  ga('create', 'UA-47810302-2', 'auto');
  ga('send', 'pageview');

</script>

நூல்கோல் ரைதா:



நூல்கோல் ரைதா:


நூல்கோல்  ஒன்றோ அல்லது சிறியதாக இருந்தால் இரண்டோ எடுத்து தோல் சீவி நாலைந்து துண்டுகளாக வெட்டி கொஞ்சம் நீரில் ஒரு  நிமிடம்
 கொதிக்க விட்டு ஆர விடவும்.  பிறகு அவற்றைத் துருவி எடுத்துக் கொள்ளவும்.

இதோடு கொஞ்சம் இஞ்சி வேண்டுமானாலும் துருவி சேர்க்கலாம்.
ஒரு சிட்டிகை உப்பு, மற்றும் மிளகு பொடி , கொத்துமல்லி பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
இரண்டு கரண்டி தயிர் சேர்த்து பரிமாறவும்.


பின் குறிப்பு:

1] நிறைய பூச்சி மருந்துகள் அடிப்பதால், பீட்ரூட், நூல்கோல், காரட் போன்ற காய் கறிகளை கொஞ்சம் நீரில் கொதிக்க விட்டு பிறகு பயன் படுத்தலாம், அந்த நீரைப்பயன் படுத்த வேண்டாம் என்று கூறுகிறார்கள்.
2] நூல் கோலில் வரும் வாசனை சிலருக்குப் பிடிக்காது, ஆனால் இந்த ரைத்தா நன்றாக இருக்கும்.   சர்கரை நோய் கட்டுப்படுத்த உதவும்.
3]  நிறைய நார் சத்து மிக்கது.


<script>
  (function(i,s,o,g,r,a,m){i['GoogleAnalyticsObject']=r;i[r]=i[r]||function(){
  (i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
  m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
  })(window,document,'script','https://www.google-analytics.com/analytics.js','ga');

  ga('create', 'UA-47810302-2', 'auto');
  ga('send', 'pageview');

</script>