நூல்கோல் ரைதா:
நூல்கோல் ஒன்றோ அல்லது சிறியதாக இருந்தால் இரண்டோ எடுத்து தோல் சீவி நாலைந்து துண்டுகளாக வெட்டி கொஞ்சம் நீரில் ஒரு நிமிடம்
கொதிக்க விட்டு ஆர விடவும். பிறகு அவற்றைத் துருவி எடுத்துக் கொள்ளவும்.
இதோடு கொஞ்சம் இஞ்சி வேண்டுமானாலும் துருவி சேர்க்கலாம்.
ஒரு சிட்டிகை உப்பு, மற்றும் மிளகு பொடி , கொத்துமல்லி பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
இரண்டு கரண்டி தயிர் சேர்த்து பரிமாறவும்.
பின் குறிப்பு:
1] நிறைய பூச்சி மருந்துகள் அடிப்பதால், பீட்ரூட், நூல்கோல், காரட் போன்ற காய் கறிகளை கொஞ்சம் நீரில் கொதிக்க விட்டு பிறகு பயன் படுத்தலாம், அந்த நீரைப்பயன் படுத்த வேண்டாம் என்று கூறுகிறார்கள்.
2] நூல் கோலில் வரும் வாசனை சிலருக்குப் பிடிக்காது, ஆனால் இந்த ரைத்தா நன்றாக இருக்கும். சர்கரை நோய் கட்டுப்படுத்த உதவும்.
3] நிறைய நார் சத்து மிக்கது.
<script>
(function(i,s,o,g,r,a,m){i['GoogleAnalyticsObject']=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,'script','https://www.google-analytics.com/analytics.js','ga');
ga('create', 'UA-47810302-2', 'auto');
ga('send', 'pageview');
</script>
No comments:
Post a Comment