காலிஃப்லவர் பக்கோடா
தேவையான பொருட்கள்:
ஒரு நடுத்தர ஸைஸ் காலி ஃப்லவர்: 1
மைதா:6 தேக்கரண்டி
அரிசி மாவு: 4 தேக்கரண்டி
CORN FLOUR: 4 தேக்கரண்டி
மிளகாய் பொடி 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி: 1 ஸ்பூன்
பெருங்காயம் தூள்: ஒரு சிட்டிகை
உப்பு :தேவையான அளவு
செய்முறை:
முதலில் காலி ஃப்லவர்ரை சிறிது காம்போடு மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கொதிக்கும் நீரில் இவற்றை போட்டு ஒரு துளி மஞ்சள் பொடி, மற்றும் துளி உப்பு சேர்த்து ஒரு இருபது நிமிடம் தட்டு போட்டு மூடி வைக்கவும்.
பிறகு நன்றாக வடிகட்டி சூடு ஆறவிடவும்.
மைதா, சோளமாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி அனைத்தையும் கலந்து ஒரு சல்லடையில் சலிக்கவும்.
ஒரு பேசினில் இவற்றை கொட்டி சுத்தப் படுத்திய காலிஃப்லவர்ரையும் சேர்த்து ஒரு அகலக் கரண்டியால் கலந்து .விடவும். மிக மிகக் கொஞ்சமாக நீர் தெளித்து கைகளால் கலந்தால் மாவு ஒரே சீராக எல்லா இடங்களிலும் ஒட்டும்.
இந்தக் கலவையை ஒரு அரை மணி நேரம் ஃப்ரிட்ஜ் இல் குளிர வைக்கவும்.
பிறகு எடுத்து மிதமான தீயில் பொறித்து எடுக்கவும்.
பின் குறிப்பு:
மேற்சொன்ன முறையில் மாவை கலந்தால் மாவு தனியாகவும் காலி ஃப்லவர் தனியாகவும் போகாமல் நல்ல முழுமையாக பரவி இருக்கும். லேசாக நீர் தெளிக்கும் போது கவனம் தேவை.
காரம் அதிகம் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.
காலி ஃப்லவர் நார் சாத்து நிறைந்தது. கேன்சர் நோய் வாராமல் பாதுகாக்கும்.
<script>
(function(i,s,o,g,r,a,m){i['GoogleAnalyticsObject']=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,'script','https://www.google-analytics.com/analytics.js','ga');
ga('create', 'UA-47810302-2', 'auto');
ga('send', 'pageview');
</script>
No comments:
Post a Comment